இயற்கைக்கு துரோகம் செய்யலாமா.......✍

தமிழை விரும்பி
உலகை உலவி
தமிழை கற்கும்
மனிதமே கேளும்

உம் கையை
உயர்த்தும் இயற்கையை
காக்கும் கடமை
உன்னிடத்து இல்லையோ?

ஞாயிறு தந்த
சோதியில் வந்த
மூலிகை முடக்கினாயே

முகில் தந்த
நீரில் வந்த
மூங்கிலை அழித்தாயே

சகாயம் தந்த
குன்றில் வந்த
ஏரியில் சாயமிட்டாயே

சேலை தந்த
சோலையில் வந்த
பருத்தியில் விடம்வைத்தாயே

வாழ்வாங்கு வாழ்ந்த
நிலத்தை நீவாழ 
வறன்டிட வைத்தாயே

இறைவன் தந்த
இறைவிகருவில் வந்த
நின் மனதினில்
இயற்கை ஈன்பாயே

மக்கள் காக்க
ஆசான்வழி நிற்கும்
மாணாக்கன் நீ
மக்கள் நலம்
காக்க பாரே
இயற்கையில் செழிக்கும்


                  -முவிக

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ