கொரோனாவிற்க்கு கவிக்கடிதம்....

விழியில் கண்ணீர்
வடிய கவிக்கடிதம்
உனக்கு எழுதுகிறேன்
உலகையே உலுக்கி
நீயும்! ஊரடங்க
செய்துவிட்டாய்!......
அஞ்சாத நெஞ்சங்களில்
அச்சம் விதைத்து
முளைக்க செய்துவிட்டாய்
பச்சிளங் குழந்தைகளையும்
காவுப்பெறத் துடிக்கின்றாய்
உலக உயிர்களை
உயிர்க்கொல்லி நீ!
உறிந்தாய்
பட்டன மனிதரையும்
பட்டினியில் பதறடித்தாய்
நீ!  உண்ணும்
நஞ்சென்ன?  உலகமே
கேட்குதய்யா!...
ஓடி! ஓடி!
பரவும் நீயும்
ஓய்வெடுக்க உறங்குவாயா?
என் சொந்த
பந்தமெல்லாம் சுகம்
காண வேண்டுமையா!.......

                         - கதிர்

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ