கவிக்கொரு விண்ணப்பம் கவியாக

கவியே!......
உனக்கொரு விண்ணப்பம்
கவியாக வைக்கிறேன்
கேளு!.....
உன்னோடு காலை எழுகிறேன்
நீயின்றி நானும் அழுகிறேன்
கட்டங்கள் அற்று நிற்கிறாய்
பட்டங்கள் யாவும் தருகிறாய்
தாயுள்ளம் கொண்ட தமிழை
தரணியில் தூக்கி நிற்கின்றாய்
சந்தங்களில் சத்தம் ஏற்றி
சதம் ஆண்டுகளை கடக்கிறாய்
கடைசியில் நிற்கும் என்னை
கவிதை எழுத்தாக ஆக்கிவிடேன்
விண்ணப்பம் ஏற்று நீயும்
பதில் கவிதான் அனுப்பிவிடேன்
                              - கதிர்

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ